Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பக்தி ஒரு சத்துணவு

பக்தி ஒரு சத்துணவு

பக்தி ஒரு சத்துணவு

பக்தி ஒரு சத்துணவு

ADDED : ஆக 20, 2013 05:08 PM


Google News
Latest Tamil News
* நாவை அடக்கினால் ஞானியாகி விடலாம். இதன் அடிப்படையில் தான், உண்ணாமல் விரதமிருப்பது, மவுனம் கடைபிடிப்பது என்றெல்லாம் ஏற்படுத்தி வைத்தனர்.

* நாவைச் சரிப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும். நாவால் உண்டாகும் சுவை, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமையும்.

* பேச்சு அளவாகவும், இனிமையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் ஒருவரின் ஆற்றல் வெளிப்படும்.

* பக்தி என்பது வாழ்வில் உணவுடன் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. பக்தியைச் சத்தான உணவாக ஏற்றுக் கொண்டால் வாழ்வு உயரும்.

* நல்ல நூல்களைப் படிப்பது, நல்லவர்களுடன் பழகுவது, கடவுளிடம் முழுநம்பிக்கை வைப்பது இவையெல்லாம் முன்னேறும் வழிகள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us